மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு: இன்று முதல் தொடக்கம்!

மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தமிழகத்தில் தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. கலந்தாய்வில் முதற்கட்டமாக இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண் உடன் நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலும் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப் பட உள்ளது. கலந்தாய்வில் பங்குபெற வரும் மாணவர்கள், ஆதார் அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், பள்ளியில் இருந்து தரப்படும் போனஃபைட் சான்றிதழ் மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. கூடுதலாக மதிப்பெண் சான்றிதழ், நீட் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவை உடன் வைத்திருப்பது விதிமுறை ஆகும்.

 

More News >>