நண்டுகளை உயிருடன் விடுங்கள்! சாப்பிடுவேன்- அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நடந்த நண்டு விடும் போராட்டத்தை நேற்று சட்டசபையில் அமைச்சர் விமர்சித்தார்.

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் அரிப்பை சரி செய்யாததால் மீனவ மக்கள் வீடு இழந்து தவித்து வருகின்றனர் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் மீனவப் பெண் ஒருவர் நேற்று நண்டு விடும் போராட்டத்தை நடத்தினார்.

இதுகுறித்து சட்டசபையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “என் வீட்டில் உயிருடன் நண்டுகளை விட்டிருந்தால் நன்றாக சமைத்து சாப்பிட்டிருப்பேன். நான் சிங்கம், புலி எல்லாம் பார்த்துவிட்டுத் தான் வந்தவன்.

நண்டு விடும் போராட்டத்தை நடத்திய மீனவப் பெண் யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பேரில் தான் இச்செய்கையைச் செய்துள்ளார்” எனப் பேசியுள்ளார்.

More News >>