செயல்படாத ஸ்டாலினா செயல் தலைவர்?- எடப்பாடி

”செயல்படாத ஸ்டாலின் தன்னை செயல் தலைவர் என சொல்லிக் கொள்கிறார்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டாலின் தற்போது தமிழக நலனுக்காக எப்போதும் போராடத் தயார் என அறிவித்திருந்தார். மேலும் அவர், “நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லோருக்கும் தெரியும்.

நான் அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம் காவிரி பிரச்னையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா அறிவித்துள்ளது பற்றி தமிழக அரசுக்கு கவலையில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதை முறியடிக்கும் வல்லமை படைத்தது அதிமுக அரசு. கடந்த ஓராண்டில் மட்டும் 31,000 போராட்டங்களை எதிர்கொண்டு நீர்த்துப் போக செய்துள்ளோம். 

செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக மட்டும்தான்” எனக் கூறியுள்ளார்.

More News >>