போராட்டங்கள் தமிழக முன்னேற்றத்தைப் பாதிக்கும்- பிரேமலதா விஜயகாந்த்

”தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும்” என தேமுதிக-வின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல், சமூக மற்றும் பொருளாதார நலன் குறித்து தேமுதிக-வின் முக்கிய உறுப்பினரும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனவியுமான பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும். சேலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விமான நிலையம் வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

More News >>