விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலம்

வெளிநாடுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடிக்கு கடன் வாங்கி திருப்பிச் செல்லாமல் லண்டனிற்கு தப்பி சென்றுவிட்டார். மல்லையாவிடம் இருந்து கடன் தொகையை மீட்டெடுக்க வங்கிகள் அனைத்தும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன. மேலும், மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பல்வேறு வசதிகளை கொண்ட ஏ319 ஜெட் விமானத்தை சேவை வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் பறிமுதல் செய்தனர். ஆனால், விமானத்தை ஏலத்தில் எடுப்பதற்கு யாரும் முன்வராத காணத்தினால் விமானத்தை விற்க முடியாமல் வரித்துறையினர் சிக்கித்தவித்து வந்தனர்.

இதனால், விமானத்தை மீண்டும் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனத்தினர் ரூ.34.5 கோடிக்கு விஜய் மல்லையாவின் விமானத்தை ஏலத்தில் எடுக்கப்பட்டது.

More News >>