டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை- வெளியான பிரேத பரிசோதனை முடிவு

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு கொலையா? தற்கொலையா? என சந்தேகம் அதிகரித்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் தூக்கிட்டு உயிரிழிந்துள்ளனர். அவர்களின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டுள்ளது. மர்மமான முறையில் 9 பேர் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டுள்ளன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்தார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார்.

மரணம் அடைந்திருந்த அனைவரும் 15 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். நேற்று டெல்லி போலீஸ் இச்சம்பவத்தை அறிந்து அந்த வீட்டுக்குச் சென்று தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

11 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பர்னிச்சர் கடை மற்றும் பலசரக்குக் கடை உள்ளதென்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

11 பேரில் ஒரு முதிய பெண்மணி மட்டும் மூச்சு நெறிக்கப்பட்டு மரணமடைந்திருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகளும் அவர்களின் மரணம் தூக்கிட்டு செய்துகொண்ட தற்கொலை தான் என வெளிவந்துள்ளது.

More News >>