6ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்

கல்பாக்கத்தில் 6ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்தி ஆசிரியராக சங்கரராவ் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பது வழக்கம்.

இந்த பள்ளியில் அணுமின் நிலைய ஊழியர் ஒருவரின் 11 வயது மகள் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்ததும் இந்தி ஆசிரியர் சங்கரராவ் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார்.

பின்னர் அந்த மாணவியை தனியாக அழைத்து வீட்டு பாடங்களை முடித்து செல்லுமாறு கூறிவிட்டு மற்ற மாணவிகளை அனுப்பி விட்டார். பிறகு தனியாக இருந்த மாணவிக்கு ஆசிரியர் சங்கரராவ் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவரது பெற்றோர்கள் இது குறித்து கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சங்கரராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>