18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: விசாரணையை ஒத்திவைத்து 3ம் நீதிபதி உத்தரவு

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக வரும் 23ம் தேதி விசாரணை நடைபெறும் என 3வது நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதும், தினகரனின் ஆதரவாளர்களான எம்எல்ஏக்களான 18 பேரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, இந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த 14ம் தேதி இந்த வழக்கு மீதான தீர்ப்பு வெளியானது. இதில், நீதிபதி சுந்தர் சபாநாயகரின் செயல் சட்டவிரோதமானதுஎன்று கூறினார். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால் யாருடைய தீர்ப்பு சரி என்பதை முடிவு செய்ய 3வது நீதிபதி எம்.சத்திய நாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று 3வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. அப்போது, எம்எல்ஏக்கள் சார்பில் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார்.

இதன் இறுதியில், இந்த வழக்கு ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், ஜூலை 23&27ம் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

More News >>