ஊழல் செய்யாத ஒரே கட்சி பாஜக!- பொன் ராதாகிருஷ்ணன்

நாட்டிலேயே ஊழல் செய்யாத ஒரே கட்சி பாஜக தான் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், "தமிழ் உணர்வு குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ் உணர்வைவிட பிரதமர் மோடிக்கு நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. 

சமஸ்கிருதத்தைவிட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் தமிழ் மொழியின் பெருமை அறிந்து பாராட்டியுள்ளார். மத்தியில் ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த திமுக என்றாவது தமிழுக்காகக் குரல் கொடுத்தது உண்டா? திமுக செயல்தலைவர் சிந்தித்துப் பேச வேண்டும்.

நாட்டிலேயே சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத ஒரே கட்சி பாஜக தான். தமிழக நிலை குறித்துப் பேச வேண்டுமானல், தமிழகத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசு துரிதமாக செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.

More News >>