கமலும் ரஜினியும் வறட்சியைத் தருவார்கள்!- அமைச்சர் ஜெயக்குமார்

'கமலும் ரஜினியும் தமிழகத்துக்கு வறட்சியைத் தான் கொண்டு வருவார்கள்' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021-ம் ஆண்டு நடைபெறக் கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு முக்கியத் தேர்தல்களிலும் அதிமுக அணி தான் வெற்றி பெறும்.

கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் தமிழகத்துக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. அவர்களால் தமிழகத்துக்கு வறட்சியைத் தான் கொண்டு வர முடியும். தமிழக ஆளுநர் செயல்பாடு குறித்துக் கூற வேண்டுமானால், தமிழக ஆளுநர் அவரது ஆட்சி, அதிகாரத்துக்கு உட்பட்டு தான் செயல்படுகிறார்.

அடுத்ததாக சமீபத்திய ரவுடி ஆனந்த் என்கவுண்டர் தற்காப்புக்காக நடத்தப்பட்டது தான். சமூகப் பாதுகாப்புக்காக சமூக விரோதியை சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது" எனக் கூறியுள்ளார்.

More News >>