டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகம் உள்ளது.

பாதுகாப்பு மிகுந்த இந்த அலுவலத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர் ஒருவர் அங்கே வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

இந்நிலையில், காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, டிஜிபி அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டது.

மேலும், மிரட்டல் விடுத்த நபர் பேசிய தொடர்பு எண்ணை வைத்து, அந்த நபரை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகின்றது.

More News >>