சாய்பாபா கோவிலுக்கு ரூ.1 லட்சம்: பிச்சைக்காரர் கொடுத்த நன்கொடை

ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக பிச்சைக்காரர் வழங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடா முத்தியால்பாடு என்ற பகுதியில் சீரடி சாய்பாபா மந்திரம் என்ற கோவில் உள்ளது. சாய்பாபா மகாசமாதி ஆடைந்து 100 ஆண்டுகள் ஆனதை அடுத்து, வரும் 26ம் தேதி அன்று 1 லட்சம் இளநீர் அபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாய்பாபா கோவில் வாசலில் பிச்சை எடுத்து வரும் யாகிரெட்டி என்பவர் அக்கோவில் நிர்வாகத்திடம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார். இது அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சாய்பாபாவால் தான் எனக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை சாய்பாபாவுக்காக செலவு செய்கிறேன் என்றார் யாகிரெட்டி.

More News >>