ஒரே நாடு ஒரே தேர்தல்!- இன்று கருத்துக் கேட்பு கூட்டம்

மத்தியிலு, மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் முடிவு செய்யப்பட்டு, இன்று அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கருத்துக் கேட்பதற்காக அனைத்து மாநிலக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாட்டில், மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க வேண்டும் என ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. இதனைச் சாத்தியப்படுத்தவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் புதிய முறை தேர்தல் குறித்து பல முக்கிய தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு இடையே பலதரப்பட்ட மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இதையடுத்து நாட்டில் ஒட்டுமொத்தமாக மத்தியிலும் மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து நாட்டில் உள்ள அனைத்து முக்கியக் கட்சிகளிடமும் க்ருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பல கட்சிகளும் இணையும் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இதற்காக தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக தம்பிதுரை எம்.பி மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதிமுக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு தற்போது வரையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

More News >>