கங்கையில் மூழ்கி சிறுவர்கள் மூன்று பேர் பரிதாப பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கங்கை ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பாபுபூர்வா பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் நேற்று மாலை கங்கை ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, சிறுவர்கள் திடீரென ஆற்றில் மூழ்கி மாயமாகினர். இதை நேரில் கண்ட சிலர் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர்.

பின்னர், அவர்கள் நடத்திய தீவிர மீட்பு பணியில் தண்ணீரில் மூழ்கிய மூன்று சிறுவர்களின் சடலம் மீட்கப்பட்டது. மேலும், மற்ற இரண்டு சிறுவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களின் வயது 12 முதல் 15 வரையில் உள்ளவர்கள் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>