வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும்!

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாகவும், மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாட்டாலும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் இன்றைய வானிலை குறித்து பேட்டியளிக்க செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், “வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மாலை, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவித்தார்.

More News >>