அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி நரேலா பகுதியில் உள்ளஅரசுப் பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்கேயே மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மதியமும் மாணவர்களுக்கு மதிய உணவு வழக்கம்போல் வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வலியால் துடித்த சுமார் 25 மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், உணவில் விஷ பூச்சி ஏதேனும் விழுந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>