உழைப்பு மட்டும் போதாது, ஆண்டவன் வேண்டும்- நடிகர் ரஜினிகாந்த்

”உழைப்பு மட்டும் இருந்தால் போதாது, ஆண்டவனின் அருள் வேண்டும்” என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தின் உருவாகி வரும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டார்ஜிலிங் பகுதியில் படமாக்கப்பட்டு வந்தது. நடிகர் விஜய் சேதுபதி உடனான காட்சிகளை முடித்த ரஜினிகாந்த், இன்று சென்னை திரும்பினார்.

இன்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கெடுத்துப் பேசினார். அப்போது அவர், “உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்” எனப் பேசினார்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் இருந்து கிளம்பும் முன்னர் நடிகர் ரஜினிகாந்த் அப்பகுதியில் உள்ள ராமகிருஷ்ணர் மடத்துக்குச் சென்று அங்குள்ள அம்மடத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுத் திரும்பினார்.

More News >>