உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பலி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் வெறிநாய்கள் சில கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் நன்தோஷி என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் கோவிலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தான். அப்போது, அங்கி நின்றிருந்த சில வெறிப்பிடித்த நாய்கள் சிறுவனை பார்த்து சீறியது. இதனால், பயந்துப்போன சிறுவன் ஓடத்துவங்கினான். இதனால், துரத்திய நாய்கள் சிறுவனை கடித்து குதறியது.

சிறுவன் அலறி துடித்ததை நேரில் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து நாய்களை துரத்தினர். பின்னர், சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News >>