மருத்துவமனை அனுமதிக்க மறுத்ததால் கால்வாயில் குழந்தையை பெற்றெடுத்த பெண்-ஒடிசாவில் பரபரப்பு

புவனேஷ்வர்: போதிய ஆவணங்கள் இல்லாததால், பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால், மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள கால்வாயிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கோராபட் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதித்துள்ள தனது கணவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது, பெண்ணுக்கு அங்கேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்ணை பிரசவத்திற்காக அனுமதிக்குமாறு மருத்துவமனை நிர்வாத்திடம் கேட்டுள்ளனர். ஆனால், பெண்ணிடம் போதிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இங்கு அனுமதிக்க முடியாது என்று பெண்ணை திரும்ப அனுப்பி உள்ளனர்.

பிரசவ வலி அதிகமானதால் வேறு வழியின்றி, மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள கால்வாயில் அவரது உறவினர்களின் உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததும், அங்கு உடனடியாக விரைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தாய்க்கும், சேய்க்கும் தேவையான சிகிச்சைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது.

More News >>