2019ம் ஆண்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதி போட்டி

தெண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதி போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில், போட்டியிட்டு ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பாஜக சார்பில் அமித்ஷா நாடு முழுவதுமான சுற்றுப்பயணத்தை தொடங்கி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக, கூட்டணி அமைக்கும் எதிர்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம், கட்சியை பலப்படுத்த மாயாவதி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, எந்த தொகுதியில் போட்டியிடப்படும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள் என்று கருதியும் மாயாவதி இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் கூறப்படுகிறது.

More News >>