இரும்பு ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 6 பேர் பலி

ஆந்திரா மாநிலத்தில், இரும்பு ஆலை ஒன்றில் விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தனியார் இரும்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திடீரென விஷவாயு கசிந்துள்ளது.

இதுகுறித்து மீட்புக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆலைக்கு அவர்கள் விரைந்தனர். பின்னர், ஆலைக்குள் சிக்கி இருந்த ஊழியர்களை மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர சம்பவத்தில் சிக்கில், 6 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்க நிலையில் இருந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>