ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசிய ஜடேஜா!

உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார்.

புதுடெல்லியில் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் டி20 போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் ஜாம்நகர் அணிக்காக ரவீந்திர ஜடேஜா விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று அம்ரேலி அணிக்காக ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார்.

இந்த போட்டியின் 69 பந்துகளில் 154 ரன்கள் விளாசினார். இதில் 10 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். இதனால், அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. மேலும், 121 ரன் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் 15ஆவது ஓவரை நிலம் வம்ஜா வீசினார். அந்த ஓவரில் ஆறு பந்துகளையும் ரவீந்திர ஜடேஜா சிக்ஸர்களுக்கு விளாசினார். இந்த சாதனையை எட்டிய மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஆவார். முன்னதாக, ரவி சாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>