டெல்லியை தொடர்ந்து ஜார்கண்டில் பரிதாபம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை

ஜார்காண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டம் போடோம் பஜார் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துக் கொண்டனர். இவர்களில், 3 பேர் தூக்குப்போட்டும், இரண்டு பேர் ரத்தி வெள்ளத்திலும், மற்றொருவர் மாடியில் இருந்து குதித்தும் உயிரை விட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. இதில், இவர்கள் நடத்தி வந்த மளிகைக்கடையில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் மறைவதற்குள், மீண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>