போதையில் ரகளை: நண்பர்களுடன் சிக்கிய பாபி சிம்ஹா

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் குடிபோதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஜிகிர்தண்டா படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பாபி சிம்ஹா. இந்த படத்திற்காக, தேசிய விருது இவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாபி சிம்ஹா விடுமுறை நாளான நேற்று சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது, பாபி சிம்ஹா அவரது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார்.

அந்த நேரத்தில், பாபி சிம்ஹாவுக்கும் அவரது நண்பர் ஜி.கே.கருணாவிற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தீவிரமடைந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாபி சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தீயாக இணையத்தளங்களில் பரவி வருகிறது.

More News >>