தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.

கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதைதவிர, தமிழகம் மற்று புதுச்சேரி கடற்ரை ஒட்டிய பகுதியில் காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் வைக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

More News >>