மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

காவிரி மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால், அவருக்கு டிரக்யாஸ்டமி என்ற கருவி பொருத்தி மூச்சுவிடுவதை எளிதாக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, அவ்வப்போது தொடர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கேபாலபுரம் வீட்டில் இருந்து கருணாநிதி சென்று வருகிறார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனைக்காக இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, கருணாநிதிக்கு ஏற்கனவே பொருத்தப்பட்ட டிரக்யாஸ்டமி கருவியில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. இந்த சிகிச்சை முடிந்த பிறகு, கருணாநிதி கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார்.

More News >>