நீட் தேர்வு வகுப்புச் சென்ற மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்!

சென்னையில் மாணவி ஒருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இரு மாணவர்களை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை முகப்பேரை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மாணவர்கள் சிலர் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளனர். இதனையடுத்து, பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகியோரை காவலர்கள் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>