தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தேனி, திண்டுக்கள், நெல்லை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை முடிந்து, தற்போது வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் பள்ள மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பொருத்தவரையில், மேகம் வானமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>