தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவித்த மு.க.அழகிரி

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்னும் ஆறு மாதத்தில் தெரிவிக்கப்படும் என்று மு.க.அழகிரி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன்களின் ஒருவர் மு.க.அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சருமான இவருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறகு யார் என்ற கேள்விக்கு நான் தான் என்று மு.க.ஸ்டாலின் அரசியல் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் திமுகவின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று யூகிக்க தோன்றுகிறது.

அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி கூறுகையில், “அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஆறு மாதங்கள் கழித்து தான் அறிவிப்பேன்” என்றார்.

More News >>