ராகுல் தலைமையில் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம்!

முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இன்று தற்போது முதன்முறையாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நாள் அன்று வாதத்தில் மோடிக்கு எதிராக ராகுல் பேசிய அரசியல் பேச்சு நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கூடியுள்ள காங்கிரஸ் கூட்டத்தில் பலரும் ராகுல் மீது கூடுதல் நம்பிக்கையுடன் வந்து கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுல் காந்திக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும்" எனக் கூறினார்.

More News >>