புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்- ஸ்டாலின்

புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக முதல்வர் நாராயணசாமிக்கும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருதரப்பினரும் மாறிமாறி யார் கை ஓங்குகியுள்ளது என்பதைக் காட்டும் வகையில் வார்த்தைப் போரில் ஈடுபடுவது வழக்கமாகிப் போயுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் போக்கைக் கண்டித்தும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டியும் முதல்வர் நாராயணசாமி டெல்லி பயணமாகி உள்ளார். இதையடுத்து தற்போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களாட்சி மாண்பை சிதைக்கும் வகையில் புதுச்சேரி ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

புதுச்சேரி மக்களின் நலனை கருதி உடனடியாக மாநிலம் அந்தஸ்து வழங்க வேண்டும் நியமன எம்.எல்.ஏக்களின் நலனுக்காக மக்கள் நலனை முடக்கிய ஆளுநர் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>