கூட்டணியை உருவாக்கத் தயாராகுகிறோம்!- ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இன்று தற்போது முதன்முறையாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுல் காந்திக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும்" எனக் கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "2019 மக்களவை தேர்தலுக்கு கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

 

More News >>