மதுரையில் பாஜக மகளிரணி தமிழ் மகள் தாமரை மாநாடு!

பாஜக தமிழக மகளிரணி மாநாடு மதுரையில் நடந்து வருகிறது.

மதுரை அருகே ஒத்தக்கடையில் பாஜக மகளிரணி தமிழ் மகள் தாமரை மாநாடு நடந்து வருகிறது. தமிழ் மகள் தாமரை மாநாட்டில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசுகையில், "மக்களவையில் கட்டிப்பிடித்தும், கண் அடித்தும் களங்கம் விளைவித்துள்ளார் ராகுல் காந்தி. தமிழக வரலாற்றை மாற்றப்போவது பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் பாஜக என்றால் வெற்றிதான், மதுரையில் எதை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்" எனப் பேசினார்.

அதற்கு முன்னதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,"பெண் குழந்தைகளின் திறன் வளர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது 114 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது" எனப் பேசியுள்ளார்.

More News >>