மீண்டும் ஓர் படுகொலை: குழந்தை கடத்தல் வதந்தியால் அப்பாவி பெண் பலி

மத்திய பிரதேசத்தில், குழந்தை கடத்த வந்த பெண் என்று நினைத்து பொது மக்கள் அடித்து தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து அப்பாவி மக்களை கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவை தொடர்ந்து வட மாநிலங்களிலும் தற்போது குழந்தை கடத்தல் வதந்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் உள்ள மோர்வா என்ற பகுதியில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி உள்ளது. இது உண்மை என்று நம்பிய சிலர் குழந்தை கடத்த வந்தவர் என்று நினைத்து 25 வயது மதிக்கத்தக்க அப்பாவி பெண் ஒருவரை பொது மக்கள் சரிமாரியாக அடித்து தாக்கினர்.

இந்த கொலைவெறி தாக்குதலில் அந்த பெண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இதுவரை 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>