கூடங்குளம் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

கடந்த 5 மாதங்களாக பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் அணு உலையில், இன்று முதல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

முதல் ஸ்டேஜில், உலையின் ஜெனரேட்டர் 250 மெகா வாட் உற்பத்தியை தொட்டது. இது மேலும் அதிகரிக்கும். கடந்த 152 நாட்களாக 2வது யூனிட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

அதற்காக, உற்பத்தி எதுவும் செய்யாமல் இருந்தோம் என்று ஆலை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தான் இந்த யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

More News >>