நீரில் மிதந்த 4 மாணவர்களின் உடல்கள்... மேட்டூரில் சோகம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உபரிநீர் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் 16 கண் பாலம் அருகிலுள்ள சேலம்கேம்ப் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் வெளியே சென்றனர். அவர்கள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில், புகார் அளித்தனர்.

இந்நிலையில் மேட்டூர் 16 கண் பாலம் அருகே 4 சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், நீர்குட்டையில் மிதந்த 4 சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்கூறு ஆய்விற்கு பின்னர் சிறுவர்களின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த சிறுவர்களின் உடலைப் பார்த்து பெற்றோர்களும் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>