கருணாநிதியை சந்திக்க இன்று சென்னை விரைகிறார் வெங்கையா நாயுடு

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சுவாசப் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. இதனால், அவ்வப்போது காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல் நலிவுற்றது. இதனால், அவருக்கு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானதால் அவரை உடனே, காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார்.இதற்காக, சென்னை மற்றும் காவேரி மருத்துவமனை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More News >>