தா.பாண்டியன் நலம்- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

தா.பாண்டியன் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் கடந்த 28-ம் தேதி மூச்சுத்திணறல் பிரச்மையின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் தகுந்த கால சிகிச்சையால் தா.பாண்டியனின் உடல்நலம் தேறியது.

இதையடுத்துத் தமிழகத்தின் மூத்தத் அரசியல் தலைவர்கள் பலர் அரசு பொது மருத்துவமனையில் தா.பாண்டியனைச் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த வகையில் இன்று அரசு மருத்துவமனையில் தா.பாண்டியனை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், “தா.பாண்டியன் மிகுந்த உடல்நலத்துடன் உள்ளார். தமிழக முதல்வர் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தனர். வீட்டில் உள்ளவர்களைப்போல் மருத்துவக் குழுவினர் கவனிப்பதாக தா.பாண்டியன் தெரிவித்தார்” எனக் கூறினார்.

More News >>