உத்தரப்பிரதேசத்தில் கனமழை எதிரொலி: 4 நாட்களில் 80 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் இதுவரை 80 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் பருவ மழை தீவிரம் காட்டி வருகிறது. இதுபோல், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையுடன் இடி மின்னலும் அடிக்கத் தொடங்கியதன் எதிரொலியால், மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடானது. வீடுகள் பல இடிந்தன.

இதனால், நேற்று வரை கனமழையில் சிக்கி 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சஹாரான்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த கனமழையில் சிக்கி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த பலரை மீட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு போதிய வசதிகளை அம்மாநில அரசு சார்பில் செய்து தரப்படுகின்றன.

More News >>