மெக்சிகோவில் 101 பேருடன் சென்ற விமானத்தில் பயங்கர தீ விபத்து

மெக்சிகோவில் இருந்து 101 பேருடன் புறப்பட்ட விமானத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மெக்சிகோ, டுராங்கோ மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் என மொத்தம் 101 பேருடன் விமானம் புறப்பட்டது. மெக்சிகோ சிட்டி நோக்கி விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் விமானத்தை உடனே புல்தரையில் இறக்கி பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தினர். விமான நிலையம் அருகிலேயே தரையிக்கப்பட்டதால், மீட்பு குழுவினரிடம் உதவியுடன் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் சுமார் 85 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அம்மாகாண கவர்னர் ஜோஸ் ரோசாஸ் தெரிவித்துள்ளார்.

More News >>