வேற்று ஜாதி இளைஞருடன் காதல்: மகளை கொன்று வெறியை தீர்த்த தந்தை

வேறு ஜாதி இளைஞரை காதலித்த ஒரே காரணத்தால், பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஹ்ரா பகுதி, தவுலத்ப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்டாராம். இவருக்கு பூஜா (21) என்ற மகள் இருந்தார்.

பூஜா வேறு ஜாதி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதல் குறித்தும், காதலன் குறித்தும் பூனா தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் பூஜா தெரிவித்துள்ளார்.

ஆனால், தட்டாராம் பூஜாவின் காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால், பூஜா தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.பூஜாவின் இந்த செயலால் மேலும் ஆத்திரமடைந்த தட்டாராம், காதலையும், வழக்கையும் கைவிடும்படி வற்புறுத்தி உள்ளார்.

ஆனால், பூஜா காதலனையே திருமணம் செய்துக் கொள்வேன் என்று பிடிவாதமாக பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தட்டாராம், பூஜாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் விவரித்த, தட்டாராம் சரணடைந்தார். மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் தட்டாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பெற்ற மகள் வேற்று ஜாதி இளைஞனை காதலித்தால் என்ற ஒரே காரணத்தால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>