ரஜினி ரசிகர்களுக்கு அதிரடி கட்டுபாடுகள்!

நடிகர் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க உள்ள நிலையில், சந்திக்க வரும் ரசிகர்களுக்கு அதிரடியாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை சந்திக்க உள்ளார். காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ரஜினியை சந்திக்க இருக்கும் ரசிகர்களுக்கு அதிரடியாக பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் யாரும் தங்களது குடும்பங்களை உடன் அழைத்து வர அனுமதி இல்லை. ரஜினிகாந்த் காலில் ரசிகர்கள் யாரும் விழக்கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு மதிய உணவு மண்டபத்திலேயே வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 400 முதல் 500 பேர் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

More News >>