ரகளையில் சகலைகள்... டாட்டா காட்டிய பெண்

பெங்களூருவில், மனைவிக்காக 2 கணவர்கள் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டைபோட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

‘இவ என்னா பொண்டாட்டியா போண்டா டீயா ஆளாளுக்கு பங்கு போடுறதுக்கு சீட்டு எழுதி போடுறேன் யாருக்கு வருதோ அவேன் கூட்டிட்டு போ' என்ற வடிவேலின் காமெடியை நினைவூட்டுகிறது இந்த சம்பவம்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை சேர்ந்த சசிகலா, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன் என்ற நபருடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் சசிகலா கடந்த 7 வருடமாக மூர்த்தி என்ற நபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மூர்த்தியை பிரிந்து சித்தராஜூ என்ற வாலிபருடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மூர்த்தி, அருண்குமார் என்பவருடன் சசிகலா சென்ற போது சாலையில் வழி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் சட்டையை கிழித்து நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்டனர். இரு கணவர்களுக்கும் டாட்டா காட்டி விட்டு அந்த பெண் வேறு நபருடன் சென்றார்.

இதை அவ்வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்ததோடு மட்டுமில்லாமல் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

More News >>