மெக்சிகோவில் கோர விபத்து: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ, குயிண்டானா பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று கவிழந்து ஏற்பட்ட விபத்தில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் உள்ள குயிண்டானா பகுதியில் சுற்றுலா தளங்களை காண பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று வந்தது. இந்த பேருந்தில் 31 பேர் பயணித்துள்ளனர். சச்சோபன் பகுதியில் உள்ள பழங்கால சுற்றலா தளமான மாயன் நகரை காண அந்த பயணிகள் குழு பேருந்தில் சென்றுள்ளது.

அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 18 பேரை கோஸ்டா மாயா நகரில் உள்ள மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News >>