ஒரு முறையாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலின் உருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்துள்ள நிலையில், “ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே..” என்று உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இவரது உடல் தற்போது ராஜாஜி ஹாலில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் மரணத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை தாங்க முடியாமல் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதி உள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் தலைவரே என்று தான் அழைப்பார்.. இந்நிலையில், “ஒரு முறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா..” என்று நெகிழ்ச்சியுடன் கடிதம் எழுதி உள்ளார்.

இதோ அந்த கடிதம்..

More News >>