கருணாநிதி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலிnbsp

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை விமானநிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.    பின்னர் அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள  ராஜாஜி ஹாலுக்கு வந்தார்.  கண்ணாடி பேழையில் இருந்த கருணாநிதி உடலுக்கு மரியாதை செய்த பிரதமர், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் துக்கம் விசாரித்துவிட்டு, அவருக்கு ஆறுதல் கூறினார்.    முன்னதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ம.க தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  இதேபோல் திரையுலகினரும் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். சிவாஜிகணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் நேரில் சென்று மரியாதை செய்தனர். நடிகர் அஜித் ஷாலினி தம்பதியினர் உள்ளிட்டோர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
More News >>