பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்

புதுடெல்லி: டெல்லியில் தொடங்கிய நாடளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா ராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில், பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றிய குஜராத் மற்றம் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்தல், குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்படும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், உ.பி., மாநில ஷாஜஹான்பூர் மக்களவை தொகுதி எம்.பி.கிருஷ்ணராஜ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உடல் நிலை குறைவு காரணமாக கிருஷ்ணா ராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற அமைச்சர்கள் கிருஷ்ணா ராஜை மீட்டு உடனடியாக டெல்லியில் உள்ள ராம்லோகியா மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய அமைச்சர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

More News >>