திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் தேதி அறிவிப்பு

திமுக தலைமைச் செயற்குழு அவசரக்கூட்டம் நடைபெறும் தேதி குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். இதையடுத்து, விரைவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 14.8.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதனால், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது காலயாக உள்ள திமுக கட்சி தலைவர் பொறுப்பிற்கு மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>