அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை - ஜெ.அன்பழகன்

மு.க.அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை என திமுக எம்.எல்.ஏ, ஜெ.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய மு.க.அழகிரி, “கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னை ஆதரிக்கின்றனர். இதற்கு காலம் பதில் சொல்லும்.எனது ஆதங்கம் எல்லாம் குடும்பத்தை பற்றியதல்ல, கட்சியை பற்றியது தான்." எனக் கூறினார்.

இதற்கு திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். “தற்போது திமுகவில் யாரும் அழகிரியுடன் தொடர்பில் இல்லை. கட்சியில் அனைவரும் கட்டுக்கோப்பாக இருக்கிறோம்" எனக் கூறினார்.

“கலைஞர் மறைவில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அழகிரி தற்போது திமுக கட்சியிலேயே இல்லை. அழகிரி நீக்கம் குறித்து இருப்பவர்கள் எடுத்த முடிவல்ல, கருணாநிதி எடுத்த முடிவு. எனவே அவர் கருத்து கட்சியில் இருந்து வெளியே இருப்பவர் கூறும் கருத்து தான்.”

“நாளை செயற்குழு கூடவுள்ளது, விரிவான பதிலை செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் தெரிவிப்பார்கள். கட்சியில் இல்லாதவர் கூறும் கருத்துக்கு, விமர்சனத்திற்கு பதில் கூற விரும்பவில்லை.” என ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

More News >>