நடிகை அமலாபால் மருத்துவமனையில் அனுமதிnbsp

பிரபல சினிமா நடிகை அமலாபாலுக்கு கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். தற்போது குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.     திருட்டுபயலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தொடர்ந்து, அதோ அந்த பறவை போல படத்தில் அமலாபால் நடித்து வருகிறார்.  வினோத் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த படத்தில் அமலாபாலுக்காக பல சண்டை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு சண்டை காட்சியில் அமலாபால் கையை வேகமாக சுழற்றிய போது காயம் ஏற்பட்டுள்ளது.    அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஆனால், அவரால், வலி தாங்க முடியாமல் துடிதுடித்துள்ளார். இதனை அறிந்த படக்குழு உடனடியாக அவரை  கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.    அமலாபாலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது வலது கையில் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.   'அதோ அந்த பறவை போல' படத்தின் படப்பிடிப்ப 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அமலாபால் கையை சரியானதும் மீதமுள்ள காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
More News >>